Showing posts with label சிவகாமியின் சபதம். Show all posts
Showing posts with label சிவகாமியின் சபதம். Show all posts

Friday, 28 February 2014

ஐ சப்போர்ட் நாகநந்தி:-) # சிவகாமியின் சபதம்




ஒரு வழியாய் சி.ச வை படித்து முடித்தாயிற்று .கல்கியின் ரெண்டு புதினங்கள் நான் படித்தவரை...பூங்குழலியின் காதல் தோல்வி,நாக நந்தியின் காதல் தோல்வியை ஒப்பிட்டு பார்க்க முயற்சிக்கிறேன்..

கல்கி உருவாக்கிய காதல் கதாபாத்திரங்களில் ஊடுருவி பார்த்தால் , ஒரு பிடிவாதம்,வெறித்தனமான அன்பு, நிறைய ஈகோ, த்யாகம் இன்னபிற அளவிட முடியாத அழகியல் சார்ந்த ரீதியில் கலந்து இருக்கும்.



பொன்னியின் செல்வனில் பூங்குழலியின் காதல் செம தோரணை என்றால்,வானதியின் காதல் மென்மையான காற்று லேசா தடவி தடவி செல்ற இதம்..

நந்தினியை பத்தி தனியாவே ஒரு பதிவில் பார்ப்போம்...



ஓ .கே ...கம்மிங் டு தி பாயிண்ட் .ஆரம்பத்தில் இருந்தே சிவகாமியின் கதாபாத்திரத்தில் ஒரு நிலையற்ற தன்மையை புகுத்த முயற்சி செஞ்சுருக்காரோ  கல்கி னு  தோணுது. எப்படியும் காதல் கை கூட போவதில்லைக்கு ஜஸ்டிபை :-) பண்ணவான்னு  தெரியல..:-)

நாகநந்தியின் காதல் ஒசத்தி தானே?

மாமல்லன் ஒரு கட்டத்தில் தந்தை கட்டளை,பதவி,சிவகாமி வாதாபியில் இருந்து வர மறுத்தது ,அவளின் தொடர்ச்சியான பிடிவாதம் இவை எல்லாம் அவன் காதலை அசைத்தது ஒரு பக்கம் என்றால்..

நாகநந்தி...ஆயிரம் குரோதம்,வெறி,கள்ளத்தனம், நிரம்பியவனாக  இருந்தாலும், சிவகாமியின் காதலுக்காக எதையும் இழக்க துணியும்(இறுதியில் வாதாபியை காட்டி கொடுக்கும் வரை,அதனால் தன தம்பி புலிகேசி இறந்த பின்பும் கூட) தான் சொல்லும் மந்திரம் சிவகாமியை தவிர வேறு ஒன்றும் இல்லை என்ற மனபாங்குக்கே ஐ சப்போர்ட் நாகநந்தி:-)

காதலின் அடிப்படைக்கு தான் ரசிக்கும் கலையை எடுத்து கூறும் நேர்த்திக்கு... ஐ சப்போர்ட் நாகநந்தி:-)

சிவகாமியின் உருவத்தை மனம் நோகும் வகையில் அஜந்தா குகையில் வரைந்த சித்திரக்காரனை கொல்லும் ஆக்ரோஷத்தில் தெரியுது வெறிப்பிடித்த காதல்... ஐ சப்போர்ட் நாகநந்தி:-)

பதவியும் வேண்டாம்.மதமும் வேண்டாம், சமூகமும் வேண்டாம்...சிவகாமி மட்டும் போதும்...கெஞ்சும் அந்த கள்ள பிட்சுவின் லவ்க்கு... ஐ சப்போர்ட் நாகநந்தி:-)

இறுதியில் தான் பரஞ்சோதியால் சிறைபட்ட பிறகு கூட சிவகாமியின் மேல் கத்தி வீசியதற்கு அவர் சொல்லும் காரணத்தில் ஊறி ஊறி வழியுது லவ் ஒ லவ்... ஐ சப்போர்ட் நாகநந்தி:-)

கடைசி வரை தன்னை காம்ப்ரமைஸ் பண்ணிக்கவே பண்ணிக்காத ..காதலில் உறுதியுடன் இருந்த நாகநந்தி லவ் ஏ லவ்...

மாமல்லன் ,பூங்குழலி ,நந்தினி,சிவகாமி எல்லாரும் சூழ்நிலை பொறுத்து மனத்தை மாற்றி கொண்டாலும்...கடைசி வரை போராடிய "தில்" நாகநந்தி... 



 ஐ சப்போர்ட் யூ மேன் ...அபிராமி...அபிராமி! சிவகாமி..சிவகாமி!! :-)