Showing posts with label வடிவேலு. Show all posts
Showing posts with label வடிவேலு. Show all posts

Tuesday, 1 April 2014

தெனாலிராமன்- வடிவேலு அண்ணே !! சூதானமா இரு...!!

ஆயிரம் சந்தானம்,சூரிக்கள் ,பவர் ஸ்டார்கள் வந்தாலும் வைகை புயல் இடத்தை எவராலும் நிரப்ப முடியாது , சில ஆண்டுகள் வடிவேலு நடிக்கவில்லை என்றாலும், வடிவேலுவை "மிஸ்" பண்ணும் உணர்வை ,நகைச்சுவை விரும்பும் ஒவ்வொரு தமிழ் ரசிகனும் ஒத்து கொள்வான்.

அரசியல் அட்ராசிட்டி யில் தொலைந்து போன வைகை புயல் ,நெடுநாள் கழித்து ,"ஜகஜல புஜபல தெனாலிராமன் "என்ற பெயர் மாற்றப்பட்டு, தெனாலி ராமனாக களத்தில் குதிக்கும் நமது வண்டு முருகனின் ரீ-என்ட்ரி..

ஒரு வழியாய் ஏப்ரல் 27- இல் படத்தின் ட்ரைலேர் வெளியிடப்பட்டு விட்டது.


தெனாலி ராமனில் ட்ரைலர் பார்த்தவரை வழக்கமான வடிவேலு பாணி கிச்சு மூச்சு எதுவும் கண்களை அகல விரித்துப்பார்த்தும் கண்டிலேன்

சீரியஸான வீர வசனங்களும், மீனாட்சி தீக்ஷித் உடன் காதல் டூயட்டும் பார்த்த பிறகு கொஞ்சம் நெஞ்சம் தகிர்..பகீர்  ன்னு தான் இருக்கு..இதை செய்ய வைகை புயல் எதற்கு...??!!!



எந்த ஒரு ரசிகனும், வடிவேலுவிடம் எஸ்.எஸ்.ஆர் போல வீர வசனமோ, கமல் போல சொட்ட சொட்ட காதலோ, வாத்தியார் போல அனல் பறக்கும் கத்தி சண்டையோ சத்தியமாய் எதிர்பார்க்க மாட்டான்.

இம்சை அரசனில் கூட புலிகேசியை ரசித்த கண்களுக்கு, உக்கிரபுத்திரன் என்றுமே சகிக்கவில்லை.



என்றும் மனதில் நீங்காத இடம் பிடித்த "சூனா பானா "வையோ, "அப்ரசண்டிகளா" நேசமநியோ, www .பிச்சுமணி.com "பிச்சுவோ,சூப்பர் டூப்பர் "கைப்புள்ளையோ ", புல்லட் பாண்டியோ, 'சச்சின்' அய்யாசாமியோ, 'சுமோ' சுண்டிமோதிரமோ ,வெடி முத்துவோ, 'சுருதி வா' சங்கி மங்கி யோ ...இதுவாகத்தான் வைகை புயல் இருப்பது ரசிகனுக்கு எப்பொழுதும் வசீகரம்.




எவ்வளவோ போராட்டங்களை சந்தித்து, மீண்டும் வெள்ளித்திரைக்கு திரும்பும் வடிவேலு மிகவும் கவனமுடனே இருப்பார் என நம்புவோம்.படம் வந்த பிறகு ஒவ்வொரு வடிவேலு ரசிகனையும் திருப்தி படுத்துமானு பார்க்கலாம்.

எனி வே ,என்கவுண்டர் ஏகாம்பரமே !! வெல்கம் பேக் தல..:-)))